Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மொத்தம் 30 கோடியாச்சு.. அள்ளி அள்ளி கொடுக்குறாரே.. போலீசாரை நெகிழ வைத்த பிரபல நடிகர்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் மும்பை போலீஸ் ஃபவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவட் ஆடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மட்டுமின்றி போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தலைமை காவலர்கள் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தனர்.
'பாகுபலி 2' வந்து அதுக்குள்ள 3 வருஷமாச்சா? ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்.. ஹீரோ பிரபாஸ் நன்றி!
ரூ. 2 கோடி நிதி
இதனை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
கடமையை செய்துவிட்டேன்
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மும்பை போலீஸ் தலைமை காவலர்களான சந்திரகாந்த் பென்டூர்கர் மற்றும் சந்தீப் சர்வ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். மேலும் என்னுடைய கடமையை நான் செய்துவிட்டேன். நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கமிஷ்னர் நன்றி
மும்பை போலீஸ் கமிஷனரான பரம்பீர் சிங் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய நடிகர் அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நகரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிரை காக்க நிச்சயம் உங்களின் பங்களிப்பு பயன்படும் என தெரிவித்துள்ளார்.
மொத்தம் 30 கோடி
ஏற்கனவே நடிகர் அக்ஷய் குமார், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார். மும்பை மாநகராட்சிக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்கினார். தற்போது மும்பை போலீசாருக்கு 2 கோடி ரூபாய் என மொத்தம் 30 கோடியை அள்ளி கொடுத்திருக்கிறார் அக்ஷய்குமார்.