Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காங்கிரஸ் சீட் கொடுத்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த நடிகர் அக்ஷய் குமார்
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்தும் அதை ஏற்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறுத்துவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கேட்டுள்ளார். ஆனால் அவரோ தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
இந்த தேர்தலில் பாலிவுட் நடிகைகள் ஹேமமாலினி, ராக்கி சாவந்த், குல் பனாக், கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இருப்பினும் அக்ஷய் குமாருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. அவர் தான் தயாரித்துள்ள ஃபக்லி படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.
அக்ஷய் காங்கிரஸ் சீட்டை ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது சொந்த ஊரான டெல்லி சாந்தினி சவுக்கில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்திருப்பார்.
சாந்தினி சவுக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர் அங்கு போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.
முன்னதாக அக்ஷயின் மாமனார் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா 1992ம் ஆண்டு பொதுத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.