Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இனிமே இப்படித்தான்... தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் புஷ்பா நாயகன்!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து தற்போது அல்லு அர்ஜூன் முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
“புஷ்பா“ அல்லு அர்ஜூனின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது… சமந்தா புகழாரம்!
புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்த பாகமும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலவையான விமர்சனங்கள்
ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பார்த்து பார்த்து சலித்த அதே பழைய கதையை சுகுமார் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் முதல் பகுதி கொடுத்த சுவாரஸ்யத்தை இரண்டாவது பகுதி கொடுக்கவில்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பான வசூல்
இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான நிலையில், உலகளவில் முதல் நாளில் மட்டுமே 40 கோடி வசூல் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனின் முந்தைய படமான அலா வைகுந்த புரமுலு படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது.
அல்லு அர்ஜுனின் திட்டம்
படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டுமே முதல் நாளில் 30 கோடி ரூபாயை வசூல் செய்தது. மேலும் தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தற்போது வேறு மாதிரியான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
தமிழ் படங்களில் நடிக்க திட்டம்
தமிழில் இந்தப் படம் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், அதன் வெற்றியை நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது கொண்டாடி வருகிறார். இனி தொடர்ந்து தமிழில் நேரடி படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில இயக்குநர்களிடம் கதை கேட்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறனுடன் இணைகிறாரா அல்லு அர்ஜுன்?
இந்த வரிசையில் முதலில் இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன் என்றும் கூறப்பட்டுள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாகிவரும் படங்கள் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.