Don't Miss!
- News நாளை வாக்குப்பதிவு.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்.. ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எந்த ஆதாரமும் இல்லை.. நடிகை அளித்த பாலியல் புகாரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் புகாரில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். மலையாள மொழியில் வெளியான சினிமா கம்பெனி என்ற படத்தின் மூலம் சினமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன், கன்னட மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
பிரியங்கா முகம் இல்லாமல் 2 புரமோ.. என்ன தைரியம் எடிட்டருக்கு.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
அர்ஜூன் மீது பாலியல் புகார்
தமிழில் நிலா, நிபுணன், சோலோ, அமெரிக்கா மாப்பிள்ளை, வதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இந்நிலையில் நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு மீடுவில் புகார் கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யாரும் இப்படி கூறியதில்லை.
இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக போகத் தயாரில்லை என்றார். மேலும் தான் இதுவரை 70க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் நடித்திருப்பதாகவும் ஆனால் இதுவரை தன்மீது யாரும் இப்படி ஒரு புகாரை கூறியது இல்லை என்றும் கூறினார்.
அர்ஜூன் மீது வழக்குப்பதிவு
மேலும் 5 கோடி ரூபாய் கேட்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகர் அர்ஜூன். ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸார் அறிக்கை
இதுகுறித்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் ஆதாரமற்றது என்று பெங்களூரு போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
Recommended Video
நடிகர் அர்ஜூன் விடுதலை
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கில் இருந்து நடிகர் அர்ஜூனை விடுதலை செய்து உத்தரவிட்டனர். நடிகர் அர்ஜூன், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழி படங்களை கை வசம் வைத்துள்ளார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.