Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சபரிமலையில் தனுஷ்... ரஜினிக்காக பிரார்த்தனையா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை கடந்த மாதம் திடீரென மோசமாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை முடித்து நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இயக்குனரும், சகோதரருமான செல்வராகவன் படத்தில் நடிப்பது குறித்த பணிகளில் ஈடுபட்ட தனுஷ், திடீரென சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தார்.
சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட நடிகர் தனுஷ், கேரள மாநிலம், கோட்டத்திற்கு சென்றார். சங்கனாச்சேரியில் உள்ள பாடகர் யேசுதாஸின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் அங்கிருந்து, பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் ஏசுதாசுடன் கொச்சினுக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் இருமுடி கட்டுக் கட்டிய இருவரும், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இரவு 10 மணிக்கு சன்னிதானத்தை அடைந்த தனுஷ், சுவாமி ஐயப்பனை தரிசித்தார். அதன்பின், கார் மூலம் சென்னை திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறியதற்காகவும், தேசிய விருது தனக்கு கிடைத்ததற்காகவும், இந்த திடீர் ஐயப்ப தரிசனம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால், தான் சபரிமலைக்கு சென்றது குறித்து கேட்டதற்கு, காரணத்தை கூற நடிகர் தனுஷ் மறுத்துவிட்டார்.