Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சபரிமலையில் தனுஷ்... ரஜினிக்காக பிரார்த்தனையா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை கடந்த மாதம் திடீரென மோசமாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை முடித்து நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இயக்குனரும், சகோதரருமான செல்வராகவன் படத்தில் நடிப்பது குறித்த பணிகளில் ஈடுபட்ட தனுஷ், திடீரென சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தார்.
சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட நடிகர் தனுஷ், கேரள மாநிலம், கோட்டத்திற்கு சென்றார். சங்கனாச்சேரியில் உள்ள பாடகர் யேசுதாஸின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் அங்கிருந்து, பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் ஏசுதாசுடன் கொச்சினுக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் இருமுடி கட்டுக் கட்டிய இருவரும், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இரவு 10 மணிக்கு சன்னிதானத்தை அடைந்த தனுஷ், சுவாமி ஐயப்பனை தரிசித்தார். அதன்பின், கார் மூலம் சென்னை திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறியதற்காகவும், தேசிய விருது தனக்கு கிடைத்ததற்காகவும், இந்த திடீர் ஐயப்ப தரிசனம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால், தான் சபரிமலைக்கு சென்றது குறித்து கேட்டதற்கு, காரணத்தை கூற நடிகர் தனுஷ் மறுத்துவிட்டார்.