Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போன ஜென்மத்துல தான் யாரா இருந்தோம்னு நெஜமாவே தேடப் போறாராம் நடிகர் தீலிப்
திருவனந்தபுரம்: சந்தானம் ஒரு படத்தில நான் யாரு நான் யாருன்னு மூச்சு விடாமக் கேட்பாரே, அதே மாதிரி ஒரு நடிகர் போன ஜென்மத்துல நாம என்னவா இருந்தோம்னு நிஜமாவே தேடப் போறாராம்.
மலையாள நடிகர் தீலிப் தான் அந்த முன்ஜென்மத்த தேடப் போற நடிகர். எல்லாம் இவர் நடிச்ச சந்திரேட்டன் எவிடயா படத்தால வந்த வெனை தான்.
ஆமாம் அந்தப் படத்தில குடும்பத்தோட தஞ்சாவூர் கோவிலுக்குப் போகும் தீலிப் ஜாதகம் மூலமா முன் ஜென்மத்தில் தன்னோட காதல் கைகூடாம போனதத் தெரிஞ்சிகிட்டு தன்னோட காதலிய இந்த ஜென்மத்தில தேடிப் போற மாதிரி கதை இருக்கும்.
அந்தப் படத்தில நடிச்சு முடிச்ச தீலிப் உண்மையிலே போன ஜென்மத்தில தான் யாரா இருந்திருப்போம்னு தேடப் போறாராம்.கடவுள் பக்தி அதிகம் உள்ள தீலிப் இதற்காக தஞ்சாவூருக்கு திரும்ப போய் தன்னுடைய முயற்சியைத் தொடங்கப் போறாராம்.
அப்படியே கையோட உங்க போன ஜென்மத்து காதலி மற்றும் மனைவி யாருன்னும் கேட்டு தெரிஞ்சிட்டு வாங்க சார்.. பல பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்!