24 வயதில் முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்
சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் முதன்முறையாக இன்று வாக்களித்துள்ளார்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். கடல் படம் ஓடாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது.

அவர் தற்போது சிப்பாய், வை ராஜா வை மற்றும் இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் வாக்களித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் கடமையை தற்போது தான் நிறைவேற்றினேன். முதல் முறை வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
24 வயதாகும் கௌதம் தற்போது தான் முதல்முறையாக வாக்களித்துள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications