Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகராக இருந்துகிட்டு இப்படி தப்பு பண்ணலாமா?: ஜெய்யை சுற்றி வளைத்து திட்டிய மக்கள்
Recommended Video
புதுச்சேரி: நடிகர் ஜெய்யை மக்கள் சுற்றி வளைத்து திட்டிய சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஜருகண்டி படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்து வருகிறார். பிச்சுமணி இயக்கி வரும் இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரெபா ஜான் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், டேனி, அமித், இளவரசு, மைம் கோபி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.
காட்சி
சாலையின் ஒரு பக்கத்தில் ஜெய் நிற்க மறுபக்கத்தில் இருந்து வில்லன் அவரை பார்க்கும் காட்சியை படமாக்கினார்கள். ஜெய் வில்லனை பார்த்து சத்தமாக பேசி சில சைகைகளை செய்ய வேண்டும். அந்த சாலையில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கேமராவை மறைவாக வைத்து காட்சியை படமாக்கினார்கள்.
ஜெய்
காட்சி படமாக்கப்படும் வரை மக்கள் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் காட்சியை முடித்த பிறகு சிலர் ஜெய்யை நோக்கி விரைந்து வந்து அவரை திட்டத் துவங்கிவிட்டனர். தப்பு பண்ணிவிட்டீர்கள் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரியாமல் நின்றேன் என்றார் ஜெய்.
திருட்டு டிவிடி
திடீர் என்று மக்கள் ஏன் தன்னை திட்டுகிறார்கள் என்று புரியாமல் விழித்த ஜெய் திரும்பிப் பார்த்தபோது திருட்டு டிவிடிகள் விற்கும் கடைக்கு முன்பு தான் நிற்பது புரிந்தது. தான் திருட்டு டிவிடிகள் வாங்க வந்ததாக தவறாக நினைத்து மக்கள் திட்டுவதை புரிந்து கொண்டார் ஜெய். ஆனால் அவர் விளக்கம் அளிக்கும் முன்பு நிலைமை கையை மீறி சென்றுவிட்டது.
விளக்கம்
மக்கள் என்னை சுற்றி வளைத்து கத்திக் கொண்டிருந்ததால் என்னால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. நல்லவேளையாக கேமரா குழு அங்கு வந்து இது வெறும் படப்பிடிப்பு என்று விளக்கியது. அதன் பிறகே உண்மை தெரிந்து மக்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கு முன்பும் நான் மக்கள் கூட்டத்தில் சிக்கியுள்ளேன். ஆனால் இப்படி ஒரு மோசமான நிலையில் சிக்கியது இதுவே முதல் முறை என்கிறார் ஜெய்.