Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயன்தாராவுடன் இணையும் 'திருநாள்' ஜீவாவுக்கு ஏற்றம் தருமா?
சென்னை: ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமான ஜீவா, ராம் படத்தின் மூலம் தன்னை நல்ல நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர்.
அதற்குப் பின் இவர் நடித்த படங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இவரின் அப்பா ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பாளராக இருந்தும் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் இவர் கொடுக்கவில்லை.
இயக்குனர் ராஜேஷ் முதன்முதலில் இவரை வைத்து எடுத்த சிவா மனசுல சக்தி படம் இவரை நச்சென்று நங்கூரமிட்டது போல் ரசிகர்களின் மனதில் நிறுத்தியது. அதுவரை சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருந்த சந்தானம் இப்படத்தில் இருந்து தான் முழு நேர காமெடியனாக மாறினார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கே.வி.ஆனந்தின் கோ படம் வந்து ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. கடைசியாக இவர் நடித்து வெளிவந்த யான் படம் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சென்று முடங்கியதால் படம் எதுவும் இல்லாமலேயே இருந்தார். ஆரம்ப காலத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஈ என்ற வித்தியாசமான படத்தில் நடித்து இருந்தார்.அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தின் மூலம் இருவரும் இணைவது குறிப்பிடத் தக்கது.
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாராவுடன் இணைந்து ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு திருநாள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி கிட்டத் தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நடிக்க வந்த போதும் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா இப்படத்தில் நடிப்பதால் படத்தின் மதிப்பு கூடியுள்ளது.
கதை கிராமத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தெனாவட்டு படத்திற்குப் பின் நடிகர் ஜீவா கிராமத்து இளைஞனாக இப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ராசு மதுரவன்,எஸ்.பி.ஜன நாதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த பி.எஸ்.ராம் நாத் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பின் முதல் கட்டம் இம்மாத இறுதியில் கும்பகோணத்தில் தொடங்குகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!