நஸ்ரியா வேணாம்- ஜீவா வைத்த முதல் வேட்டு
நய்யாண்டியில் தம்மாத்தூண்டு தொப்புள் விவகார்ததை பப்ளிசிட்டிக்காக நஸ்ரியா ஊதியபோதே, இது ஊத்திக்கிற கேசு என கோடம்பாக்கம் ஆரூடம் சொன்னது.
அது இப்போது நிஜமாகத் தொடங்கிவிட்டது.
நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்யக் காத்திருந்த ஜீவா, இப்போது அவர் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம்.

நடித்தது இரண்டுதான்
நஸ்ரியா நடித்து இரண்டு படங்கள் வந்திருக்கின்றன. இரண்டில் ராஜா ராணியில் இவருக்கு பிரதான வேடம்கூட இல்லை.

அதற்குள் 7 கையில்
ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட ஏழு தமிழ்ப் படங்களில் நஸ்ரியா ஒப்பந்தமானார்.

தனுஷுடன் சேர்ந்ததால் குவிந்த வாய்ப்புகள்
குறிப்பாக தனுஷ் ஜோடியாக நய்யாண்டியில் அவர் ஒப்பந்தமானதுமே, வாய்ப்புகள் குவிந்தன.ஆனால் அதற்கெல்லாம் அவரே சூனியம் வைத்துக் கொண்டார்.

தொடர்ந்து தொல்லை
நய்யாண்டி விவகாரத்தில் அவர் போலீஸ், வக்கீல் என தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், இனி பிரஸ் மீட் வைக்கவே கமிஷனர் ஆபீசுக்குத்தான் போகணும்போல என முணுமுணுக்க ஆரம்பித்தனர் அவரை வைத்து படம் பண்ணும் இயக்குநர்கள்.

வம்பும் வேண்டாம்.. நஸ்ரியாவும் வேண்டாம்
இப்போது எதற்கு வம்பு என்று, நஸ்ரியா வேண்டவே வேண்டாம்... அப்படியே போர்த்தி அனுப்பி வைய்யுங்க என்று ஒருவருக்கொருவர் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

காத்திருந்த ஜீவா.. நோ சொன்னார்
இவரை தன் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய கடந்த ஒரு மாதமாகக் காத்திருந்த ஜீவா, இப்போது நஸ்ரியா வேண்டவே வேண்டாம். வேறு ஹீரோயின் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











