Don't Miss!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அத்தையின் சொத்து, கட்சி, பதவி வேணும்... தண்டனை மட்டும் வேணாமா தீபா, தீபக்? - நடிகர் ஜீவா
தீபா அவர்களே... சுயநலத்துக்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகர் ஜீவா.
வளர்ந்து வரும் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜீவா. பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜீவா, ரஜினியின் தீவிர ரசிகர்.
ஜீவா இப்போது ஆரம்பவே அட்டகாசம், மாப்பிள்ளை விநாயகர், மெரிலின், பயமா இருக்கு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சினிமாவோடு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்து அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த தன் கருத்துகளை துணிந்து வெளிப்படுத்தி வருகிறார்.
சமீப காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக ஜெ தீபா, தீபக் போன்றவர்கள் செய்துவரும் 'அரசியல் காமெடிகள்' மீதான விமர்சனங்களையும் அவர் வைத்துள்ளார்.
"ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்..
அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா. அத்தையின் வாரிசுதானே..?
உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது.
உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்... மக்களை ஏமாற்றாதீர்கள்.
தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள்... தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் ! தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணமடையும் வரை யாரென்றே தெரியாமல் இருந்துவிட்டு, திடீரென போயஸ் தோட்டத்துக்கு சொந்தம் கொண்டாடும் தீபக்குக்கும் இதே கேள்விகளை வைத்துள்ளார் ஜீவா.