Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அத்தையின் சொத்து, கட்சி, பதவி வேணும்... தண்டனை மட்டும் வேணாமா தீபா, தீபக்? - நடிகர் ஜீவா
தீபா அவர்களே... சுயநலத்துக்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகர் ஜீவா.
வளர்ந்து வரும் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜீவா. பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜீவா, ரஜினியின் தீவிர ரசிகர்.
ஜீவா இப்போது ஆரம்பவே அட்டகாசம், மாப்பிள்ளை விநாயகர், மெரிலின், பயமா இருக்கு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சினிமாவோடு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்து அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த தன் கருத்துகளை துணிந்து வெளிப்படுத்தி வருகிறார்.
சமீப காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக ஜெ தீபா, தீபக் போன்றவர்கள் செய்துவரும் 'அரசியல் காமெடிகள்' மீதான விமர்சனங்களையும் அவர் வைத்துள்ளார்.
"ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்..
அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா. அத்தையின் வாரிசுதானே..?
உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது.
உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்... மக்களை ஏமாற்றாதீர்கள்.
தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள்... தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் ! தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணமடையும் வரை யாரென்றே தெரியாமல் இருந்துவிட்டு, திடீரென போயஸ் தோட்டத்துக்கு சொந்தம் கொண்டாடும் தீபக்குக்கும் இதே கேள்விகளை வைத்துள்ளார் ஜீவா.