திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா
திருப்பதி : திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா புதன்கிழமை காலை வழிபட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா, ஏழுமலையானை தரிசிக்க ஜீவா செவ்வாய்க் கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.

இரவு திருமலையில் தங்கிய அவர், புதன்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு அர்ச்சகர்கள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.

விரைவில் அவர் புதிய படம் தொடங்க உள்ளதால், அதற்கு முன் சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தெரிவித்தார்.
Comments


Click it and Unblock the Notifications