Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழ்க் காற்றின் சுகந்தம்... கண்ணதாசன் குறித்து கமல் பாராட்டு!
சென்னை : கவிஞர் கண்ணதாசன் சிறப்பான பல பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர்.
தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்தவர். பல விருதுகளையும் பெற்றவர்.
பிக் பாஸ் 5: இங்க அரசியல் இருக்கு என சூசகமாக பேசும் கமல்.. இவங்களாம் ஸ்ட்ராட்டஜி பண்றாங்களாம்!
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கண்ணதாசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் நடித்துள்ளவர். தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பல நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
கண்ணதாசன் குறித்து பாராட்டு
இந்நிலையில் கவிஞர் கண்ணதாசன் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். கண்ணதாசன் தமிழ்க் காற்றின் சுகந்தம் என்று அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் காட்சியை கேட்ட மறுநொடி கவியரசுக்கு கவிதை வியர்த்துக் கொட்டிவிடும் என்றும் கூறியுள்ளார். தத்தகாரம் தரும்வரை அதை தடுத்து வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.
புகழ்பாடும் வழக்கம்
கவிஞரின் வரிகளில் அன்றாடம் லயித்திருப்பதும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவர் புகழ் பாடுவதும் தன்னுடைய வழக்கம் என்றும் கமல் தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனின் வரிகள் எப்போதுமே ரசிகர்களின் மனதிற்கு இதமான சுகத்தை தருபவை. அதை தற்போது கமல் வெளிப்படுத்தியுள்ளார்.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள்
கவிஞர் கண்ணதாசன் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு ஆன்மீகக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது
சேரமான் காதலி படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதையும் கண்ணதாசன் பெற்றுள்ளார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 1981ல் உயிரிழந்தார்.
கண்ணதாசனுக்கு மணிமண்டபம்
இவரது மறைவு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இழப்பாக உள்ளது. இவருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மண்டபம் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதில் கவிஞரின் மார்பளவிலான சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.