Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாங்காக்ல இருந்து பறந்து வந்தும் இப்படியாயிடுச்சே... 'தம்பி' கார்த்தி அப்செட்!
சென்னை: பாங்காக்கில் இருந்து பறந்து வந்தும் தம்பி படத்தின் புரமோஷனல் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியால் கலந்துகொள்ள முடியவில்லை.
கார்த்தி- ஜோதிகா அக்கா-தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம், தம்பி. பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்து இருக்கிறார்.
சவுகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். வயாகாம் 18 மற்றும் பேரலல் மைண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. தெலுங்கு, மலையாளத்திலும் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.
இதற்காக கேரளாவில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பாங்காக்கில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்த கார்த்தி, இதில் கலந்து கொள்ள, வருவதாக இருந்தது.
அந்த ஷூட்டிங்கிற்கு பிரேக் கொடுத்துவிட்டு நேராக பிளைட் பிடித்த கார்த்தி, சென்னை வந்து சேர்ந்தார். இங்கிருந்து கொச்சி செல்ல வேண்டும்.
இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால் அந்த நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதற்குள் செல்ல வேண்டும் என்பதால் கார்த்தி, காலையிலேயே ஏர்போர்ட் வந்தார். அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதமானதால், செல்ல முடியவில்லை.
இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை. கார்த்தி இல்லாமல், நிகிலா விமல், டைரக்டர் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். பின்னர் நேற்று இரவு அங்கு சென்ற கார்த்தி, சில சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.