உயிர்கள் சாகிறது -காட்டுத்தீயில் இருந்து கொடைக்கானலை காப்பாத்தணும் - நடிகர் கார்த்தி வேண்டுகோள்
சென்னை : நடிகர் கார்த்தி தொடர்ந்து ரசிகர்களுக்கு சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது சர்தார் படம் உருவாகி வருகிறது. இவர் தொடர்ந்து சமூக அக்கறையுடன் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

முன்னணி நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் மகன் என்ற அடையாளம் இவருக்கு இருந்த போதிலும் தனது சொந்த முயற்சி மற்றும் திறமையால் மட்டுமே இவர் தனக்கான அடையாளத்தை சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2007ல் இவர் பருத்தி வீரன் என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கொண்டாட்டமான நடிகர்
தொடர்ந்து இவருக்கு ஏறுமுகம்தான். தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஆக்ஷன் படமானாலும், கடைக்குட்டி சிங்கம் போன்ற சென்டிமெண்ட் படமானாலும், பையா போன்ற காதல் கதையானாலும் இவருக்கு அப்படியே பொருந்துகிறது. கைதி படத்தில் இவரது கெட்டப் மிரட்டலாக இருக்கும். ரசிகர்களும் இவரது நடிப்பில் தங்களை அப்படியே பொருத்திக் கொள்கின்றனர்.

சர்தார் படத்தில் கார்த்தி
இவர் தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இவருடைய ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தின் கெட்டப்புகள் மிகவும் விரும்ப்பட்டுள்ளது. நீண்டி தாடியுடன் கார்த்தியின் கெட்டப் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

15 ஆண்டு சினிமா கேரியர்
இதனிடையே சினிமாவில் இவர் என்ட்ரி கொடுத்து தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இதையொட்டி கடந்த மாதத்தில் இவர் தனது முதல் படமான பருத்தி வீரன் படம் குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவரது ரசிகர்கள், சக நடிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர்.

சமூக அக்கறை
தன்னுடைய அண்ணனை போலவே கார்த்தியும் சமூக அக்கறையுடன் பல விஷயங்களை செய்து வருகிறார். தனது உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் கார்த்தி. இதன்மூலம் நிஜத்திலும் தான் ஹீரோ தான் என்பதை நிரூபித்து வருகிறார்.

காட்டுத்தீ குறித்து குரல்
இந்நிலையில் தற்போது கொடைக்கானலில் ஏற்பட்டுவரும் காட்டுத்தீ குறித்து குரல் கொடுத்துள்ளார் கார்த்தி. கோடைக்கு இதமளிக்கும் இயற்கை தந்த வரம் கொடைக்கானல் என்று தரிவித்துள்ள கார்த்தி, சிறிய தீப்பொறியிலும் காடுகள் மற்றும் மலைவளங்கள் பாழாகும் சூழலை சுட்டிக் காட்டியுள்ளார்.

வனத்துறைக்கு ஆதரவு தர கோரிக்கை
காட்டுத்தீக்கு எதிரான போரில் வனத்துறையினருடன் இணைந்து பொதுமக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கொடைக்கானல் மட்டுமின்றி பல காடுகளில் காட்டுத்தீ என்பது வனத்துறையினருக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. ஆண்டுதோறும் பல இயற்கை வளங்கள் இதன்மூலம் பாழாகின்றன.

காட்டுத்தீயால் சேதம்
கொடைக்கானலின் பெருமாள் மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளை இந்த காட்டுத்தீ பரவி அரிய வகை உயிரினங்கள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவை கருகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புகைமூட்டத்தால் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











