Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கங்க... மகேந்திரன் கோரிக்கை
சென்னை : நாடு தழுவிய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
திரை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
சிம்பு – ஹன்சிகா பட விவகாரம்...கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
இந்நிலையில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.
தொடர் லாக்-டவுன்கள்
கொரோனா வைரஸ் இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ள இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கென மத்திய, மாநில அரசுகள் தொடர் லாக்டவுன்களை அறிவித்து வருகின்றன.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு
இதையடுத்து கொரோனாவின் தாக்கம் தற்போது மட்டுப்பட்டுள்ளது. ஆயினும் இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை அடுத்து கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
புகைப்படங்கள் பகிர்வு
திரை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தங்களது தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாம் டோசை போட்டு அதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தங்களது புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவதன்மூலம் மற்றவர்களையும் போட தூண்டி வருகின்றனர்.
தடுப்பூசி போட்ட நடிகர் மகேந்திரன்
இந்நிலையில் தற்போது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தடுப்பூசிகள் அனைவரது வாழ்க்கையையும் காப்பாற்றும் என்றும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறும் மற்றவர்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!