Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஒரு நாள்'.. நந்தா குரலில் காணொளி.. ஏற்றத்தாழ்வுகளை மறந்து நம்பிக்கையுடன் இருப்போம் !
சென்னை : நடிகர் நந்தா 'ஒரு நாள்' என்கிற காணொளிக்கு குரல் கொடுத்துள்ளார் .
பாக்கி பிக்சர்ஸ் சார்பில் கொரோனா லாக்டவுனுக்காக வெளியிடபட்டிருக்கும் காணொளிக்கு தான் நந்தா வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த காணொளி முழுவதும் ஊரடங்கிற்கு முன் உலகம் எப்படி இயங்கி கொண்டிருந்தது தற்போது எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்பதை ஒளியை வைத்து கதையாக கூறியுள்ளார் நந்தா.
லாக்டவுனுக்கு முன் இந்த சத்தங்களைத்தான் நாம் கேட்டோம். ஆனால், லாக்டவுனுக்கு பின் சைரன் சத்தம், வீட்டில் நம் குடும்பத்தின் சத்தம் மற்றும் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால் பல புதிய சத்தங்கள் உருவாகியிருக்கிறது என்று இந்த காணொளியில் நந்தா கூறியிருக்கிறார்.
லாக்டவுன் காரணமாக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை! கணவர் வெளியிட்ட போட்டோ.. ரசிகர்கள் வியப்பு!
ஒரு அழுத்தமான வசனத்துடன் இந்த காணொளி நிறைவு பெறுகிறது, அது 'ஒரு நாள் இந்த சத்தங்கள் நின்று போய் விடும் ஆனால் கவனமாக கேட்டால் ஒரு கோடி சத்தங்கள் இன்னும் கூடுது' என்ற வசனத்துடன் பல கோடி மக்கள் கொரோனோவை எதிர்த்து போராடி வருகின்றனர். மேலும் ஏற்றத்தாழ்வு மற்றும் பாசிசத்தை எதிர்த்து போராடி வருகின்றனர் என்றும் எழுத்துகளால் கூறப்பட்டு பின் நாம் இதை கடப்போம் என்ற நம்பிக்கையான வார்த்தைகளுடன் காணொளி முடிவடைகிறது.
நடிகர் நந்தா இதற்கு முன் இப்படி சிறிய காணொளிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தது கிடையாது இதுவே முதல் முறையாகும். ஆனால் மலையாள படமான செல்லூய்டு ரீ மேக்கில் தமிழில் ப்ரித்விராஜிற்கு நந்தா தான் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடதக்கது. நந்தாவிற்கு இருக்கும் தனித்துவமான குரல் இந்த காணொளிக்கு சரியாக பொருந்தியுள்ளது.
நடிகர் நந்தா இறுதியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் பாஸ்கரன் மற்றும் நட்ராயன் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். யாரும் எதிர்பாராத அளவில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தது அனைவரையும் ஆச்சரியபடுத்தியிருந்தார்.
நந்தா த்ரிஷா நாயகியாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைப்பிடப்படாத ஒரு அதர்வா படத்திலும் நந்தா நடித்து வருகிறார் .