twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாரிஸ் ஜெயராஜ் செய்த வேலையைச் செய்யும் பாகுபலி பிரபாஸ்!

    பிரபாஸ் மல்டி பிளெக்ஸ் பிசினெஸில் இறங்கியுள்ளார்

    |

    ஐதராபாத்: நடிகர் பிரபாஸ் மல்டி ப்ளக்ஸ் தொழிலில் முதலீடு செய்துள்ளார்.

    பாகுபலி கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு சிறப்பாக நடித்தவர் பிரபாஸ்.

    Actor Prabhas new business!

    இந்திய நடிகராக பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள பிரபாஸ், இப்போது மல்டிபிளக்ஸ் பிசினெஸிலும் கால் வைத்துள்ளார். நெல்லூரில் மிகப்பிரம்மாண்டமாக மல்டி பிளக்ஸ் திரையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அது யுவி கிரியேஷன்ஸுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

    நடிகர் பிரபாஸ் அதில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தஞ்சாவூரின் புகழ்பெற்ற மல்டி பிளெக்ஸான ஜிவி ஸ்டுடியோவை வாங்கினார்.

    இந்த நிலையில் நடிகர் பிரபாஸும் மல்டி பிளெக்ஸ் பிசினஸில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பிரபாஸ் தற்போது சாகோ என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் படமாக்கப்பட்டுள்ளது.

    ஷ்ரதா கபூர், நீல் நித்தின் முகேஷ், அருண்விஜய் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார்.

    English summary
    Actor Prabhas entered into multiplex business. Sources says, he has invested money in multiplex theatre which is currently building in Nellore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X