Don't Miss!
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டு... பொன் மாணிக்கவேல் குறித்து நெகிழ்ந்த பிரபுதேவா
சென்னை : நடிகர் பிரபுதேவா முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெளியாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல்.
Recommended Video
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
எழுந்திருக்கும்
போதே
சூப்பர்
நியூஸ்...
ரசிகர்களுக்கு
நன்றி
சொன்ன
பீஸ்ட்
நாயகி
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், நடிகர் பிரபுதேவா படம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார் பிரபுதேவா.

காவல்துறை அதிகாரி
நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட அதுகுறித்து விசாரிக்கவரும் காவல்துறை அதிகாரியான பிரபுதேவா சந்திக்கும் சிக்கல்கள் குறித்து இந்தப் படம் பேசுகிறது. படத்தில் சுரேஷ் மேனன், மறைந்த இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

சொதப்பிய திரைக்கதை
ஆயினும் சிறப்பான திரைக்கதையுடன் பயணித்திருக்க வேண்டிய படம் தாறுமாறாக வேறெங்கெங்கோ செல்வதால் ரசிகர்களின் நிதானத்தை சோதிப்பதாக அமைந்துள்ளது. படம் குறித்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது படம் குறித்து பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் திறந்துள்ளார்.
|
ட்விட்டரில் பேசிய பிரபுதேவா
வீடியோ மூலம் பேசியுள்ள அவர், படத்திற்கான ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தனது அபிமானிகள் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் படத்தை பார்த்ததாகவும் படம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முகம் தெரியாதவர்களின் விமர்சனம்
இந்நிலையில் தான் ஒரு பயணத்தை மேற்கொண்டபோது தனக்கு முற்றிலும் புதியவர் ஒருவர் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியதை அடுத்து படம் குறித்த நம்பிக்கை தனக்கு எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியாகியுள்ளது.

படத்தை கண்டிப்பாக பாருங்க
இந்நிலையில் படத்தை ரசிகர்கள் பார்க்கும்படியும் கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் பிரபுதேவா முதல்முறையாக காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளது குறித்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.