Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரச்சாரத்தில் குதித்தார் பிரசாந்த்: திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்!
திரும்பிய பக்கமெல்லாம் யாராவது ஒரு சினிமா நடிகர் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வாக்கு கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முன் எந்தத் தேர்தலிலுமே பார்க்க முடியாத நிலை இது.
இந்த நட்சத்திர பிரச்சாரகர்கள் லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ளவர் நடிகர் பிரசாந்த். திமுகவுக்கு ஆதரவாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
பொன்னர் சங்கர் என்ற அவரது பிரமாண்ட சரித்திரப் படம் வெளியாகியுள்ள நிலையில், திமுகவின் ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் அசன் முகமது ஜின்னாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக தனது பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார். பார்த்தீஸ்வரன் காலனி, சூளைமேடு, நமச்சிவாயபுரம், கோபாலபுரம், தாமஸ் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.
"கலைஞர் அரசின் திட்டங்கள் தொடரவும், சென்னை நகரம் மேலும் மேம்பாடு அடையவும் ஜின்னாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்", எனக் கேட்டுக் கொண்டார்.
கலைஞரிடம் மு.க.ஸ்டாலினிடமும் உங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வு கிடைக்கச் செய்யும் ஆற்றலுடைய இளைஞர்தான் ஜின்னா என்று கூறிய ஜின்னா, தானும் ஆயிரம் விளக்குத் தொகுதியின் வாக்காளன் என்றார்.
துணை முதல்வர் ஸ்டாலின்...
ஜின்னாவை ஆதரித்து துணை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திண்டுக்கல் லியோனி ஆகியோரும் ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்தனர்.