Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரச்சாரத்தில் குதித்தார் பிரசாந்த்: திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்!
திரும்பிய பக்கமெல்லாம் யாராவது ஒரு சினிமா நடிகர் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வாக்கு கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முன் எந்தத் தேர்தலிலுமே பார்க்க முடியாத நிலை இது.
இந்த நட்சத்திர பிரச்சாரகர்கள் லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ளவர் நடிகர் பிரசாந்த். திமுகவுக்கு ஆதரவாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
பொன்னர் சங்கர் என்ற அவரது பிரமாண்ட சரித்திரப் படம் வெளியாகியுள்ள நிலையில், திமுகவின் ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் அசன் முகமது ஜின்னாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக தனது பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார். பார்த்தீஸ்வரன் காலனி, சூளைமேடு, நமச்சிவாயபுரம், கோபாலபுரம், தாமஸ் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.
"கலைஞர் அரசின் திட்டங்கள் தொடரவும், சென்னை நகரம் மேலும் மேம்பாடு அடையவும் ஜின்னாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்", எனக் கேட்டுக் கொண்டார்.
கலைஞரிடம் மு.க.ஸ்டாலினிடமும் உங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வு கிடைக்கச் செய்யும் ஆற்றலுடைய இளைஞர்தான் ஜின்னா என்று கூறிய ஜின்னா, தானும் ஆயிரம் விளக்குத் தொகுதியின் வாக்காளன் என்றார்.
துணை முதல்வர் ஸ்டாலின்...
ஜின்னாவை ஆதரித்து துணை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திண்டுக்கல் லியோனி ஆகியோரும் ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்தனர்.