Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'பாவாட' பணத்தை மிச்சப்படுத்தி சென்னைக்கு உதவிய பிருத்விராஜ்
திருவனந்தபுரம்: தனது நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாவாட' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஒதுக்கிய பணத்தை மிச்சப்படுத்தி அதனை சென்னை மக்களுக்கு அளித்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாப் பணத்தை மிச்சப்படுத்தி சென்னை நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.
ஒரு இசை வெளியீட்டு விழா எனில் சுமார் 250 - 300 நபர்கள் வரை கலந்து கொள்வர். மேலும் கலந்து கொள்பவர்களுக்கு படக்குழுவினர் விருந்து அளித்து உபசாரம் செய்வர்.
இந்நிலையில் தனது படத்திற்கு நெருக்கமான வெறும் 25 பேரை அழைத்து தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக எளிமையாக நடத்தியிருக்கிறார் பிருத்விராஜ்.
இதற்கு படக்குழுவினரும் ஒத்துழைப்பு அளித்திருக்கின்றனர். தனக்கு நெருக்கமான சென்னை நகரம் துயரத்தில் இருக்கும்போது தனது இசை வெளியீட்டு விழாவை ஆடம்பரமாக நடத்த பிருத்விராஜ் விரும்பவில்லை.
தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவின் மூலம் மிச்சமான ரூ 1 லட்சத்தை சென்னை நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறது பிருத்விராஜ் அண்ட் கோ.