Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சஞ்சய் தத்துக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு!!
1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டதால், மீதியுள்ள 42 மாத கால தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர் பின்னர் பாதுகாப்பு கருதி புனே ஏர்வாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க கோரி சஞ்சய்தத் கடந்த 1-ந் தேதி மனு செய்தார்.
இதை தொடர்ந்து அவர் 14 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் இன்றுடன் முடிந்தது.
நீட்டிப்பு
இந்த நிலையில் பரோலை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க கோரி சஞ்சய்தத் மனுதாக்கல் செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக நீட்டிக்குமாறு அவர் கேட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உடல் நிலை காரணங்களுக்கு அவருக்கு மேலும் 14 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்வதாக உத்தரவிட்டுள்ளது.