Don't Miss!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- News
காவி நிறத்தில் குடுமி- பூணூலோடு பிராமின் குக்கீஸ்.. பிஸ்கெட்டிலும் ஜாதியமா? நெட்டிசன்கள் கொந்தளிப்பு
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தியில் பேசினார்கள்.. அத்துமீறினார்கள்.. விமானநிலையத்தில் சித்தார்த்துக்கு நடந்த அவமானம்!
சென்னை : மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் அதிகாரிகளால் நடிகர் சித்தார்த் அவமானப்படுத்தப்பட்டதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார் சித்தார்த்.
சித்தார்த்
மேல
க்ரஷ்..அவருக்காக
அட்ஜெஸ்ட்மென்ட்
பண்ணலாம்..ஓபனாக
பேசிய
நடிகை!

இந்தியன் 2 படத்தில்
நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கிரைன் சரிந்து விபத்து, பட்ஜெட் பிரச்சனை போன்ற காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. கமலின் விக்ரமன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து லைக்கா நிறுவனத்துடனான பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

துன்புறுத்தினார்கள்
சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேசிவரும் சித்தார்த், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மதுரை விமானநிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்கள் வயதான என் பெற்றோர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். அவர்கள் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

இந்தியில் பேசாதீங்க,ஆங்கிலத்தில் பேசுங்கள்
அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். இருப்பினும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் என்று காட்டமான பதிவிவை பகிர்ந்துள்ளார். பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசை விமர்சித்தார்
நடிகர் சித்தார்த், கொரோனா இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த போது மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து இருந்தார். திரையுலக பிரபலங்கள் அனைவரும் மௌனமாக இருந்த போது நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் அவருக்கு பல கொலை மிரட்டல்களும் வந்தன.