Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாக்ஸ் ஆபிஸ் கட்டுக்கதை.. எவ்வளவு கமிஷன் வாங்குறீங்க? கடுப்பில் நடிகர் சித்தார்த்.. சரமாரி கேள்வி!
சென்னை: பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விவரங்கள் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதாக நடிகர் சித்தார்த் சரமாரியாக விளாசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.
ரஜினியிடம் பாலச்சந்தர் வைத்த கோரிக்கை: நிறைவேறாத சோக நினைவுகள்
தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சித்தார்த், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வருகிறார்.
சித்தார்த் டிவிட்
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார் சித்தார்த். இதனால் சமூக வலைதளத்தில் அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு டிவிட்டியிருந்தார் சித்தார்த் .
நெட்டிசன்களுடன் மல்லுக்கட்டு
அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா மரணமடைந்த போது தவறுதலாக ஒரு நெட்டிசன் சித்தார்த்தின் போட்டோவை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து கடுப்பான சித்தார்த் அந்த நெட்டிசனையும் விளாசியிருந்தார். இதேபோல் பலமுறை நெட்டிசன்களுடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டியுள்ளார் சித்தார்த்.
கடும் விமர்சனம்
இதேபோல் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கிய போது, சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் நடிகர் சித்தார்த். இந்நிலையில் படங்களின் வசூல் பற்றிய பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் குறித்து கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். அவரது இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எவ்வளவு கமிஷன்?
நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து பொய்யான தகவல் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் அல்லது ரேட் பெற்று வருகிறீர்கள்? 'முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் காலம் காலமாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து பொய் கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது வர்த்தக பணியாளர்கள், மீடியாக்கள் என பலர் அத்தனை மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை போலியாக பகிர்ந்து வருகிறார்கள்.
சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
எல்லா மொழிகளும், அனைத்து தொழில்களும்.. ஒரே மாதிரியானவை. பான் இந்தியா நேர்மையற்றது என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள் என்ற நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.