Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாமியே சரணம் ஐயப்பா.. ஈஸ்வரன் படம் வெற்றி பெற மலையேறும் சிம்பு!
சென்னை : விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் மாஸ்டர் படத்துடன் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாக உள்ளது.
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்றும் சிம்புவின் வெற்றியை பார்க்க திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆவலுக்கு நம்பிக்கை தரும் வகையில் சுசிந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் உருவாகி உள்ளது.
பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனா.. கட்டியணைத்து லிப்லாக் கொடுத்து வரவேற்ற கணவர்.. க்யூட் வீடியோ!
பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் இப்பொழுது சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டு கொண்டு தியானத்தில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் செமயாக வைரலாகி வருகிறது.
நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே
எத்தனைத் தோல்வி திரைப்படங்கள் கொடுத்தாலும் சிம்புவுக்கு மட்டும் ரசிகர்கள் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் நிலையில், சிம்புவின் அசைக்க முடியாத சொத்தாக அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
திரையுலகமே அதிர்ந்து
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் உடல் எடை மொத்தமும் கூடி ஆளே டோட்டலாக மாறிப்போன சிம்புவை பார்த்து திரையுலகமே சிம்பு இனி அவ்வளவுதான் என பேசிக் கொண்டிருக்க, மாஸா ஸ்டைலா கெத்தா எடையை குறைத்து இப்பொழுது ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து இருக்கும் சிம்புவைப் பார்த்து அதே திரையுலகம் அதிர்ந்து போயுள்ளது
முன்னணி இயக்குனர்
மேலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பும் இப்பொழுது தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் அவ்வப்போது கசிந்து வைரலாகி வரும் நிலையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
சிம்பு எது செய்தாலும் கோலிவுட்டில் ட்ரெண்டாகி வரும் நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வித்தியாசமான கெட்டப்பில் இதுவரை பார்த்திராத லுக்கில் வெளியாகி இணையதளத்தை தெறிக்கவிட்டு வைரலானது.
சபரிமலைக்கு மாலை
இந்நிலையில் இப்பொழுது சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் கருப்பு சட்டை கருப்பு வேஷ்டியுடன் உட்கார்ந்து இருக்கின்றவாறு சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், ஏற்கனவே மாநாடு படப்பிடிப்பு நன்றாக செல்ல வேண்டும் என இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோருடன் சிம்பு சபரிமலைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.