Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"அடுத்த ரஜினி"... தனுஷ் பேச்சுக்கு பதிலடி... எமோசனல் வீடியோ வெளியிட்ட சிம்பு!
நடிகர் சிம்பு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தனுஷின் 'அடுத்த ரஜினி' குறித்த பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக எமோசனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
ரஜினியின் 'காலா' படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், 'சினிமாவில் நுழையும் பெரும்பாலான நடிகர்களுக்கு, அடுத்த ரஜினியாகிவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை இருக்கிறது. ஆனால், அடுத்த ரஜினியாவதற்கு இங்கு ஃபார்முலா எதுவுமே இல்லை. காரணம், எப்போதுமே ஒரு 'சூப்பர் ஸ்டார்' மட்டும்தான்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலடி தரும் விதமாக நடிகர் சிம்பு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் உட்பட பல்வேறு விசயங்களைப் பேசியுள்ள சிம்பு, கூடவே அடுத்த ரஜினி பிரச்சினை பற்றியும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அந்த வீடியோவில் அவர், "நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "என்னால் ரோபோ போல் வேலை செய்ய இயலாது. என் மீது தப்பு என்றால் மன்னிப்பு கேட்பேன். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். இதன் பிறகு நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என எனக்குத் தெரியாது" என அந்த வீடியோவில் சிம்பு பேசியுள்ளார்.
ஏன் சிம்பு இவ்வளவு விரக்தியாகப் பேசியுள்ளார் என அவரது ரசிகர்கள் குழப்பமும், வேதனையும் அடைந்துள்ளனர்.