Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த நாளை மறக்கவே முடியாது... உருகிய டாக்டர் நாயகன்... எதுக்கு?
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
இதையொட்டி அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தன.
இந்நிலையில் பிறந்தநாளை இனிமையாக்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வராமல்.. சிகப்பு நிற காரில் விஜய் வரக் காரணம் என்ன?
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவித்து வருகிறார். நகைச்சுவையில் துவங்கிய அவரது பயணம் தற்போது சிறப்பான நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என நீண்டுள்ளது. மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாகவே விஜய் டிவியில் அவரது கேரியர் துவங்கியது. தற்போது ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் கலை அவருக்கு கைவந்துள்ளது.
டாக்டர் படம் வெற்றி
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அவரது அடுத்த படமான டான் வரும் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இதனிடையே அவரது அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் கடந்த 17ம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி அவரை சக நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து மழையில் நனைய விட்டனர். அவரது ரசிகர்களும் பல அன்னதானங்கள் உள்ளிட்டவற்றை செய்து அவரது பிறந்தநாளை சிறப்பாக்கினர்.
சிவகார்த்திகேயன் நன்றி
இந்நிலையில் ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கை மூலம் சிவகார்த்திகேயன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாளை மிகவும் சிறப்பாக மறக்க முடியாததாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து அனைவருக்கும் பிடித்தமான படங்களை தருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்
சிவகார்த்திகேயன் பிரபல நடிகராக விளங்கி வருகிறார். அடுத்ததாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!