Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றாரா நடிகர் சூர்யா?
ஆந்திர மாநிலத்தில் செயல்படும் பிரபல செய்தி சேனல் ஏபிஎன் நியூஸ். அந்த சேனல் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் கும்பல் பற்றி ஒரு விசாரணை நடத்தியது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவின் மகன் தாரக ராமா ராவ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த கும்பலை அணுகி தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தர கேட்டது தெரிய வந்துள்ளது என்று ஏபிஎன் தெரிவித்துள்ளது.
சூர்யா அந்த கும்பலை அணுகி ரூ.10 முதல் ரூ.100 கோடி வரையிலான கருப்பு பணத்தை மாற்றித் தருமாறு கேட்டதாக அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அந்த கும்பலுக்கு பெரிய தொகையை வழங்கவும் சூர்யா ஒப்புக் கொண்டதாக ஏபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அந்த சேனல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இதெல்லாம் படு அபத்தமான தகவல்கள்.. சூர்யா அப்படிப்பட்டவருமல்ல. அரசுக்கு சரியாக வரி செலுத்தி வரும் இளம் நடிகர்களுள் முதன்மையானவர் என சூர்யா தரப்பில் தெரிவித்தனர்.
சூர்யா மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு கடுப்பு!