twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘ஜெய்பீம்’ நிஜ செங்கேணி பார்வதிக்கு… சூர்யா செய்த மகத்தான உதவி!

    |

    சென்னை : சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தொடர்ந்து பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

    உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, இப்படத்தில் இடம் பெற்ற ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தற்போது வறுமையில் வாழ்ந்து வாடி வருகிறார்.

    4 நாட்களில் ரூ. 150 கோடி வசூல்... ரெக்கார்டுகளை உடைத்த அண்ணாத்த! 4 நாட்களில் ரூ. 150 கோடி வசூல்... ரெக்கார்டுகளை உடைத்த அண்ணாத்த!

    அவருக்கு நடிகர் சூர்யா, வாழ் நாள் முழுவதும் பயன் அளிக்கக்கூடிய வகையில் ஒரு மகத்தான உதவியை செய்துள்ளார்.

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ந் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்குத் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சூர்யாவுக்கு வேண்டுகோள்

    சூர்யாவுக்கு வேண்டுகோள்

    ஜெய் பீம் திரைப்படத்தை பாராட்டிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி தற்போதும் கூலிவேலை செய்து சிரமப்பட்டு வருவதாகவும், அவருக்கு ஏதேனும் உதவி செய்யுமாறு நடிகர் சூர்யாவிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.

    சூர்யா அறிக்கை

    சூர்யா அறிக்கை

    பாலகிருஷ்ணன் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா , ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தி இருக்கிறோம். நீதிபதி சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்து இருக்கிறோம்.

    வாழ்நாள் முழுவதும்

    வாழ்நாள் முழுவதும்

    மேலும், ராசாக்கண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்ச ரூபாய் தொகையை டெபாசிட் செய்து அதில் இருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்து இருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய்ச் சேரும்படி செய்யலாம் முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

    English summary
    Actor Surya give Rs 10 lakh to Rasakkannu's wife Parvathi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X