Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் நன்றாக நடித்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு ஜோதிகாதான் காரணம்!
காற்றின் மொழி படம் பற்றி நடிகர் விதார்த் பகிர்ந்துகொண்டார்
சென்னை: காற்றின் மொழியில் நன்றாக நடித்திருந்தால் அதற்கு ஜோதிகாவே காரணம் என விதார்த் தெரிவித்துள்ளார்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் காற்றின் மொழி. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகர் விதார்த் கூறியதாவது...
ராதாமோகன் சார் படத்தில் நடிக்க வேண்டுமென்று எனக்கு நீண்ட நாள் ஆசை இருந்தது. ஒரு நாள் திடீரென தயரிப்பாளர் தனஞ்செயன் போன் செய்து, இப்படி ஒரு படம் பண்ணுகிறோம். அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா எனக் கேட்டார். ராதாமோகன் படம், ஜோதிகா நடிக்கிறாங்க எனும்போது எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்? உடனே ஒகே என சொல்லிவிட்டேன்.
ஆனால், படத்தின் கதையை கேட்டபிறகுதான் பயம் வந்தது. ஏண்டா இந்த படத்துல ஒத்துகிட்டோம் என பயந்தேன். இயக்குனர் ராதாமோகன் முதலில் நீளமான காட்சியை படமாக்க வேண்டும் என்றார். நான் தயக்கத்தோடு கொஞ்சம் சின்ன சீன் எடுக்கலாமே அப்போதுதான் உங்களை நானும் என்னை நீங்களும் புரிந்துகொள்ள முடியும் என்றேன். உடனே சரி என்று சொல்லிவிட்டார்.
படப்பிடிப்பில் ஜோதிகா மற்றும் எம். எஸ். பாஸ்கரின் நடிப்பைப் பார்த்தவுடன் இன்னும் பயம் அதிகரித்தது. ஜோதிகாவின் ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் ராதாமோகன் அருமை என சைகையில் பாராட்டிக்கொண்டே இருந்தார். மிகச் சாதாரணமாக எனதருகில் உட்கார்ந்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் சார், ஷாட் சொன்னதும் சட்டென்ன அழுது நடித்தது மிக ஆச்சர்யாமாக இருந்தது. நான் இப்படத்தை நன்றாக நடித்து முடிப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவும் காரணம்.
அவ்வளவு பெரிய நடிகையாக இருக்கும் ஜோதிகா என்னுடன் பேசுவாரா என்ற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அவர், நீங்க 'ஜோ' ந்னு கூப்பிடுங்க எனச் சொல்லி அதிர்ச்சியூட்டினார். நான் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என சொன்னால் அதற்கு ஜோதிகா மேடம்தான் காரணம் என்றார்.