Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி?
சென்னை: நடிகர் விஜய் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்காக இயக்குநர்களிடம் கதை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த சகாப்தம் படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை.

இருப்பினும் மதுரவீரன் எதிர்ப்பார்த்த அளவுக்கு வசூலித்தது. இதைத்தொடர்ந்து தமிழன் என்று சொல்லடா படத்தில் நடித்து வருகிறார் சண்முகப்பாண்டியன். இதில் விஜயகாந்தும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் சண்முகப்பாண்டியனுக்கு டர்னிங் பாயிண்டு கொடுக்கும் வகையில் அவரை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர் விஜய். இதற்காக இயக்குநர்களிடம் சண்முகப்பாண்டியனுக்கு ஏற்றார்போல் கதை கேட்டு வருகிறாராம் விஜய்.
விஜயின் நாளைய தீர்ப்பு படம் கைக்கொடுக்காத நிலையில் செந்தூரப்பாண்டி மூலம் விஜய்க்கு உதவினார் நடிகர் விஜயகாந்த். இந்த நன்றிக்கடனுக்காக விஜய், சண்முகப்பாண்டியனுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி தர எண்ணியுள்ளாராம்.
தனது சொந்த செலவில் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இந்தப்படத்தில் இசையமைப்பாளர், கேமராமேன் என பெரிய டெக்னிஷியன்களை பயன்படுத்தவும் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.