Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி?
நடிகர் விஜய் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்காக இயக்குநர்களிடம் கதை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் விஜய் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்காக இயக்குநர்களிடம் கதை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த சகாப்தம் படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை.
இருப்பினும் மதுரவீரன் எதிர்ப்பார்த்த அளவுக்கு வசூலித்தது. இதைத்தொடர்ந்து தமிழன் என்று சொல்லடா படத்தில் நடித்து வருகிறார் சண்முகப்பாண்டியன். இதில் விஜயகாந்தும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் சண்முகப்பாண்டியனுக்கு டர்னிங் பாயிண்டு கொடுக்கும் வகையில் அவரை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர் விஜய். இதற்காக இயக்குநர்களிடம் சண்முகப்பாண்டியனுக்கு ஏற்றார்போல் கதை கேட்டு வருகிறாராம் விஜய்.
விஜயின் நாளைய தீர்ப்பு படம் கைக்கொடுக்காத நிலையில் செந்தூரப்பாண்டி மூலம் விஜய்க்கு உதவினார் நடிகர் விஜயகாந்த். இந்த நன்றிக்கடனுக்காக விஜய், சண்முகப்பாண்டியனுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி தர எண்ணியுள்ளாராம்.
தனது சொந்த செலவில் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இந்தப்படத்தில் இசையமைப்பாளர், கேமராமேன் என பெரிய டெக்னிஷியன்களை பயன்படுத்தவும் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.