Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேரளாவுக்கு ஒரு கோடி..! கேப்டனின் பெரிய மனசு!
கேரளாவுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்
சென்னை: நடிகர் விஜயகாந்த் தேமுதிக சார்பில் கேரள மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கேரளா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. பல துறையைச் சேர்ந்தவர்களும் கேரளாவை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க மத்திய அரசை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும்.
— Vijayakant (@iVijayakant) August 20, 2018
கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.#KeralaFloodRelief pic.twitter.com/uEiuMF2wky
சினிமாவில் அதிகமான புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு, மகன் சண்முகப்பாண்டியனோடு தமிழன் என்று சொல் என்ற திரைபப்படத்தில் நடிப்பதாக இருந்தது. பிறகு விஜயகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.