Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விரைவில் இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார் விக்ரம்
தமிழ், இந்தியில் உருவாகி வெளியான ராவணன் படம் யாருக்கு பிரேக் ஆக இருந்ததோ, விக்ரமுக்கு இந்தியில் பெரும் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஒரே நபராக வில்லனாகவும், ஹீரோவாகவும் அவர் செய்த அசத்தலான கதாபாத்திரமும், அவரது நடிப்பும் இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை விட இந்தி திரையுலகினரையும் மெய்மறக்க செய்துள்ளது.
பலரும் விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியது போக இப்போது அவரை தங்களது படங்களில் நடிக்குமாறும் அழைக்க ஆரம்பித்துள்ளனராம்.
அவர்களில் முக்கியமானவர் நீரஜ் பாண்டே. இவர் ஏ வெட்னஸ்டே படத்தை இயக்கியவர். நசிருதீன் ஷா, அனுபம் கெர் நடிப்பில் உருவான இப்படம்தான் தமிழில் கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில் உன்னைப் போல் ஒருவனாக ரீமேக் ஆகி வடக்கையும், தெற்கையும் கவர்ந்ததாகும்.
நீரஜ் பாண்டே ராவண் படத்தைப் பார்த்து அசந்து போய் விட்டாராம். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் விக்ரமை சந்தித்துள்ளார். அவரை வெகுவாக பாராட்டிய நீரஜ், தனது படத்தில் நடிக்குமாறும் விக்ரமை கேட்டுள்ளார். விக்ரமும் மகிழ்ச்சியுடன் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளாராம்.