Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா கிருமியே ஓடு.. களத்தில் இறங்கிய நடிகர் விமல்.. தெருத் தெருவாக கிருமி நாசினி தெளித்தார்!
திருச்சி: மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் நடிகா் விமல் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார்
Recommended Video
களவாணி, பசங்க, வாகை சூடவா, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல்.
வருது.. வருது.. தெலுங்கு லஸ்ட் ஸ்டோரி்ஸ்.. புரோமோஷன் வேலையை இன்ஸ்டாவில் தொடங்கிய பிரபல நடிகை!
சமீப காலமாக புதிய படங்கள் ஏதும் கிடைக்காமல் தவித்து வரும் நடிகர் விமல், நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி 2 படமும் படுதோல்வியை சந்தித்தது.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில், சொந்த ஊரில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் விமல்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் நடிகா் விமல் சனிக்கிழமை நண்பகல் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார்.
மணப்பாறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் சனிக்கிழமை நண்பகல் கைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவந்தது. முன்னதாக, தனது சொந்த ஊரான பன்னாங்கொம்புக்கு வந்திருந்த நடிகா் விமல், கிராமத் தெருக்களில் கைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, அதிமுக திருச்சி புறநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் மகேஷ், ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் இருந்தனா்.