விஷ்ணு விஷால் எடுத்த திடீர் முடிவு… ஏன் என்னாச்சு…ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் எடுத்துள்ள திடீர் முடிவால் அவரது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
முன்னணி நடிகரான விஷ்ணு விஷாலுக்கு வெண்ணிலா கபடி குழு வெற்றிப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் என நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

எஃப்.ஐ.ஆர்
விஸ்ணு விஷால் நடிப்பில், சமீபத்தில் வெளியானத் திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமியாக இளைஞராக நடித்துள்ளார்.

மோகன்தாஸ்
எஃப்.ஐ.ஆர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், மோகன்தாஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை களவு பட இயக்குனர் முரளி கார்த்திக் இயக்குகிறார். விக்ணேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
மோகன்தாஸ் படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். அவரைத் தொடர்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திரஜித் சுகுமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இத்திரைப்படத்தை விவி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

விலகுகிறேன்
இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். நான் சமூக வலைத்தளங்களில் இருந்து கொஞ்ச காலத்துக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என கூறியுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவைப்பார்த்த ரசிகர்கள், ஏன் இந்த திடீர் முடிவு...என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











