எல்லாத்துக்கும் அதுதான் காரணம்.. ராமராஜனை பிரிந்தது பற்றி ஓபனாக சொன்ன நளினி
சென்னை: கோலிவுட்டில் 80களில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் ராமராஜன். அவரது வளர்ச்சி அப்போது பீக்கில் இருந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரின் வயிற்றில் புளி கரைத்தது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவர் தனது படங்களை ஹிட் படங்களாக கொடுத்தார். இடையில் சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் நளினியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இரண்டு பேரும் எழுதியிருக்கும் அத்தியாயத்தை எப்போதும் அழிக்க முடியாது. அவர்கள்தான் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஐகான்களாக இருக்கிறார்கள். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவர்களை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக 80கள், 90களில் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் போட்டியாக பலர் வந்தாலும் சிலர் மட்டும்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் ராமராஜன்.

மெகா ஹிட்: ராமராஜனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் என்றால் அது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் ஜானரில்தான் உருவாகியிருந்தது. ஆனால் அதில் விஷேஷம் என்னவென்றால் இதில் எடுத்துக்கொண்ட மையக்கரு கரகாட்டம். கிராமங்கள் பக்கம் கொண்டாடப்படும் கரகாட்டத்தை கதையின் கருவாக வைத்து; ஹீரோ, ஹீரோயினை கரகாட்ட கலைஞர்களாக காண்பித்திருந்ததால் படம் மெகா ஹிட்டானது.
ராமராஜனின் ராஜ்ஜியம்: அந்தப் படத்திலிருந்து ராமராஜனின் ராஜ்ஜியம் தமிழ் சினிமாவில் வளர்ந்தது. கரகாட்டக்காரன் கொடுத்த மவுசால் ராமராஜனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தப் படங்களும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டாகத்தான் அமைந்தன. முக்கியமாக கிராமங்கள் பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைக் கண்டு ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோர் எல்லாம் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் என்பது உண்மை.
ராமராஜனின் ரீ என்ட்ரி: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், 'ராமராஜனின் வளர்ச்சியை பார்த்து ரஜினிகாந்த் அஞ்சினார்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோதே நளினியை காதலித்து திருமணம் செய்து பிறகு பிரிந்தார் ராமராஜன். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்துவந்த ராமராஜன் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இப்போது சாமானியன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரிலீஸான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.
நளினி பேட்டி:இந்நிலையில் நளினியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எத்தனை ஜென்மங்கள் நான் எடுத்தாலும் அவர்தான் (ராமராஜன்) எனக்கு கணவராக வேண்டும். நானும் அவரும் தற்போதுகூட நன்றாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்கள் பிரிந்திருந்தால் நல்லது. பிள்ளைகள் தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்ற ஜாதக ரீதியான காரணங்களால்தான் விவாகரத்து பெற்றோம். அவருக்கு ஜாதகத்தின் மீது பெரிய நம்பிக்கை"என்றார்.


Click it and Unblock the Notifications











