Don't Miss!
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாலா படத்திற்காக மீண்டும் வாரணம் ஆயிரம் கேரக்டராக மாறும் சூர்யா
சென்னை : பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படம் 2001 ல் வெளியாகி சூர்யாவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதுவரை சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்த சூர்யாவை, ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய படம் நந்தா தான்.
அதைத் தொடர்ந்து 2003 ல் மீண்டும் பாலா இயக்கிய பிதாமகன் படம், சூர்யாவின் காமெடி முகத்தை உலகிற்கு அடையாளம் காட்டியது. விக்ரம், சூர்யா ஆகியோருக்கு நடிப்பில் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் பிதாமகன்.
சூர்யா சார் சாரி கேக்குறாரேனு மேக்கப் மேன் அழுதுட்டார்! சூரரைப்போற்று சம்பவத்தை பகிர்ந்த எழுத்தாளர்!
மீண்டும் சூர்யா – பாலா
இந்நிலையில் மீண்டும் சூர்யா, பாலா இணையும் படம் உருவாக உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் பாலா இயக்கும் படத்தை தயாரிக்க போவதாக கூறப்பட்டது.
விலகிய அதர்வா
பல ஆண்டுகளுக்கு பின் சூர்யா - பாலா இணையும் இந்த படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளதாகவும். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. சூர்யா, கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதர்வா ஏற்கனவே நடித்து வரும் படங்களின் தேதியுடன் ஒத்துவராததால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.
இரட்டை வேடத்தில் சூர்யா
அதனால் சூர்யாவையே ஹீரோவாக நடிக்க வைக்க பாலா முடிவு செய்து விட்டாராம். தந்தை - மகன் என இரண்டு ரோல்களிலும் சூர்யாவே நடிக்க போகிறாராம். இதற்கு முன் 2008 ல் கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் தந்தை - மகன் ரோலில் நடித்திருந்தார் சூர்யா.
தந்தை – மகன் கேரக்டர்
கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தந்தை - மகன் ரோலில் நடிக்க தயாராகி வருகிறாராம் சூர்யா. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளனவாம்.