Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கே.பி.சி.யில் வக்கீல்களை அசிங்கப்படுத்துறாங்க யுவர் ஆனர்: அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கௌன் பனேகா க்ரோர்பதி அதாவது கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 7வது சீசனை நடத்தி வருகின்றார். டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வழக்கறிஞர்களையும், அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்தியுள்ளனர் என்று கூறி வழக்கறிஞர் தாவிந்தர் சிங் ராக்கட் என்பவர் அகமதாபாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் எஸ்.வி. பாரேக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நிகழ்ச்சியை நடத்தும் அமித்பா பச்சன், தயாரிப்பாளர் சித்தார்த் பாசு மற்றும் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமிதாப் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வரும் ஒரு காட்சியில் வழக்கறிஞர் ஒருவர் இதை நான் எதிர்க்கிறேன் என்று கத்திக் கொண்டு மேஜையில் தட்டுகிறார், அதற்கு மற்றொரு வழக்கறிஞர் அவரிடம் முதலில் நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கட்டும் என்கிறார் என்று ராக்கட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.