Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 8 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அஜீத் படம்-வதந்திகளை நம்பவேண்டாம்: விஷ்ணு வர்த்தன்
பில்லா 2 படத்திற்கு பின்னர் தல அஜீத் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளி வந்து அஜித்துக்கும், விஷ்ணுவர்தனுக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தந்தது. எதிர்பாராத காரணங்களினால் பில்லா 2 படத்தை இயக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அஜீத்- விஷ்ணுவர்த்தன் ஜோடி மீண்டும் இணைகிறது.
புதிய படத்தின் கதாநாயகியாக அமலாபால், அனுஷ்கா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்று படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.
படம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அஜீத் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர் தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் தீர்மானிக்கப்படும் அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் துவங்கும்.
அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம்." என்றார். மேலும் இந்த படத்தில் வித்தியாசமான தலையை பார்க்க இருக்கிறீர்கள் என்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் சந்தோசம் கொடுத்திருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.