Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தலைக்கு விட்டு தந்த இளைய தளபதி விஜய்-அஜீத்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.விஜய்க்கும், அஜீத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படிமோதிக் கொண்டார்கள். அதிலும் அஜீத்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்றுவறுத்தெடுத்து வந்தார் விஜய், தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்.தீனா படத்தில் அஜீத்தை தல என்று கூப்பிடுவார்கள். அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜீத்தைபோட்டு தாக்கியிருப்பார் விஜய்.அதே போல அஜீத்தும் தனது படங்களிலு விஜய்யை மறைமுகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு சைக்கிள் மாதிரிஆகிப் போனது. இருவரும் ஒருவரை ஒருவரை வசனங்களால் தாக்குவதும், அதைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டுவதும்வழக்கமாகிப் போனது.ஒரு கட்டத்தில் இந்த மோதல் இருவரின் பேட்டிகளிலும் எதிராலிக்க ஆரம்பித்தது. இது தொடரக் கூடாது என்று நினைத்த சிலநல்ல மனம் கொம்ட திரையுலக புள்ளிகள் இருவரிடமும் பேச்சு நடத்தி இருவரையும் சரிக்கட்டிவிட்டதாகத் தகவல்கள் வந்தன.இந் நிலையில் இருவரது சமீபகால பேட்டிகளிலும் ஒருவர் மீதான ஒருவர் தாக்குதல்கள் குறைந்தன. குறிப்பாக விஜய்,அமைதியாக விட்டார். இதனால் தல, நிம்மதியாக உள்ளார்.இந்த நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு திருப்பதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் விசேஷம் இருக்கிறது. முதலில் திருப்பதி என்ற பெயர் விஜய் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.இதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை விட்டுத் தர வேண்டும் என்று ஏவி.எம். கேட்டது. ஹீரோயார் என்று விஜய் கேட்க அஜீத் என்ற விவரத்தை ஏவி.எம் கூறியது.அதைக் கேட்டதும் மறுப்பே இல்லாமல் உடனடியாக டைட்டிலை விட்டுத் தர சம்மதித்துவிட்டார் விஜய். ஏவி.எம் நிறுவனத்தைவிட அஜீத்துக்குத் தான் இதில் பெரிய மிகழ்ச்சியாம்.அஜீத்தை வைத்து திருப்பதியை இயக்கப் போவது யார் தெரியுமா?. விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசுதான். இப்போது விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு திருப்பதி பக்கம் வருகிறார்.அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகுமாம் திருப்பதி.டைட்டிலில் தொடங்கியுள்ள நட்பு லைஃபிலும் தொடர்ந்தால் சரி.
விஜய்-அஜீத்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
விஜய்க்கும், அஜீத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படிமோதிக் கொண்டார்கள். அதிலும் அஜீத்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்றுவறுத்தெடுத்து வந்தார் விஜய், தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்.
தீனா படத்தில் அஜீத்தை தல என்று கூப்பிடுவார்கள். அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜீத்தைபோட்டு தாக்கியிருப்பார் விஜய்.
அதே போல அஜீத்தும் தனது படங்களிலு விஜய்யை மறைமுகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு சைக்கிள் மாதிரிஆகிப் போனது. இருவரும் ஒருவரை ஒருவரை வசனங்களால் தாக்குவதும், அதைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டுவதும்வழக்கமாகிப் போனது.
ஒரு கட்டத்தில் இந்த மோதல் இருவரின் பேட்டிகளிலும் எதிராலிக்க ஆரம்பித்தது. இது தொடரக் கூடாது என்று நினைத்த சிலநல்ல மனம் கொம்ட திரையுலக புள்ளிகள் இருவரிடமும் பேச்சு நடத்தி இருவரையும் சரிக்கட்டிவிட்டதாகத் தகவல்கள் வந்தன.
இந் நிலையில் இருவரது சமீபகால பேட்டிகளிலும் ஒருவர் மீதான ஒருவர் தாக்குதல்கள் குறைந்தன. குறிப்பாக விஜய்,அமைதியாக விட்டார். இதனால் தல, நிம்மதியாக உள்ளார்.
இந்த நேரத்தில் இன்னொரு நல்ல சேதி. அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு திருப்பதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் விசேஷம் இருக்கிறது.
முதலில் திருப்பதி என்ற பெயர் விஜய் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதை அறிந்த ஏவி.எம். நிறுவனம் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை விட்டுத் தர வேண்டும் என்று ஏவி.எம். கேட்டது. ஹீரோயார் என்று விஜய் கேட்க அஜீத் என்ற விவரத்தை ஏவி.எம் கூறியது.
அதைக் கேட்டதும் மறுப்பே இல்லாமல் உடனடியாக டைட்டிலை விட்டுத் தர சம்மதித்துவிட்டார் விஜய். ஏவி.எம் நிறுவனத்தைவிட அஜீத்துக்குத் தான் இதில் பெரிய மிகழ்ச்சியாம்.
அஜீத்தை வைத்து திருப்பதியை இயக்கப் போவது யார் தெரியுமா?. விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசுதான். இப்போது விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு திருப்பதி பக்கம் வருகிறார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகுமாம் திருப்பதி.
டைட்டிலில் தொடங்கியுள்ள நட்பு லைஃபிலும் தொடர்ந்தால் சரி.