நானே கடவுள்!: கை கழுவினார் பாலா பாலா இயக்கத்தில், அஜீத் நடிப்பதாக இருந்த நானே கடவுள் படம் கைவிடப்பட்டு விட்டது. அதற்குப் பதில், பி.வாசுஇயக்கத்தில் அஜீத்தை வைத்துப் படத்தைத் தயாரிக்கிறார் பாலா.பிதாமகன் மூலம் விக்ரமுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பாலா. பிதாமகனுக்குப் பிறகு புதிய படம் எதையும்இயக்கவில்லை. இடையில் சூர்யா, ஜோதிகாவை வைத்து மாயாவி என்ற படத்தைத் தயாரித்தார்.அதன் பின்னர் புதிய படத்தை இயக்குவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக இறங்கினார். அஜீத் நடிக்க நானே கடவுள் என்றபடத்தை பாலா இயக்க இருந்தார். பாலாவின் பார்முலாப்படி இந்தப் படத்துக்காக அஜீத் தனது கெட்-அப்பை அப்படியேஉல்டாவாக மாற்றினார் நீண்ட தாடியும், நீண்ட தலைமுடியும் வளர்த்து வந்தார் அஜீத். உடல் எடையையும் பல கிலோக்கள் குறைத்தார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவிருந்த நிலையில் காட்ஃபாதர் தொடர்பான பிரச்சினையில் சிக்கினார் அஜீத். காட்பாதர்படத்தின் சூட்டிங் இழுபறியாகிப் போனதால் அதை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டுத் தான் பாலாவின் படத்தில் நடிக்கத்தயாரானார் அஜீத்.ஆனால், காட்ஃபாதர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்துக்குப் போகுமாறு நெருக்க ஆரம்பித்துவிட்டார்கே.எஸ்.ரவிக்குமார். முதலில் முடியாது என அஜீத் கூறிவிட்டு முடி வளர்க்க ஆரம்பித்தார். ஆனால், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்ததால், நானேகடவுள் படத்துக்காக கஷ்டப்பட்டு வளர்த்து வந்த தாடி, தலைமுடியை வெட்டி எறிந்துவிட்டு (பாலாவின் அனுமதியுடன் தான்)மீண்டும் காட்ஃபாதரில் நடிக்க ஆரம்பித்தாக் அஜீத்.இந் நிலையில் நானே கடவுள் படத்தின் கதையில் பாலாவுக்கு திடீரென இல்லாமல் போய் விட்டதாம். இதனால் இந்தப் படத்தைஇப்போதைக்கு எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் பாலா. இதைக் கோட்டு அஜீத் அதிர்ந்துவிட்டாராம். அதே நேரத்தில் அஜீத்திடம் வாங்கிய கால்ஷீட், கொடுத்த அட்வான்ஸ் இதையெல்லாம் மனதில் வைத்து பி.வாசுவின்இயக்கத்தில் அஜீத்தை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார் பாலா. இதற்கு அஜீத்தும் ஒத்துக் கொண்டுவிட்டார்.பி.வாசு, அஜீத்துடன் இணைந்து படம் செய்வது இதுவே முதல் முறையாகும். சந்திரமுகியின் மெகா வெற்றியால் வாசு மீதானஎதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.இந் நிலையில் அஜீத்-வாசு-பாலா காம்பினேஷன் படம் என்பதால் கோலிவுட்டில் இப்போதே பெரும் எதிர்பார்ப்புஏற்பட்டுவிட்டது. படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் வருகிறார்.காட்பாதர் முடிந்தவுடன், ஏவி.எம். படத்தில் நடிக்கும் அஜீத் அடுத்ததாக வாசுவின் இயக்கத்தில் நடிக்கிறார்.தெலுங்கில் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் நயனதாராவை ஹீரோயினாக்கி ஒரு படத்தை இயக்கப் போகிறார் வாசு. அதைமுடித்துவிட்டு அவர் வரவும், ஏவி.எம் படத்தை முடித்துவிட்டு அஜீத் வரவும் சரியாக இருக்குமாம்.இருவரையும் வைத்து படத்தை பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பாலா.

By Staff

பாலா இயக்கத்தில், அஜீத் நடிப்பதாக இருந்த நானே கடவுள் படம் கைவிடப்பட்டு விட்டது. அதற்குப் பதில், பி.வாசுஇயக்கத்தில் அஜீத்தை வைத்துப் படத்தைத் தயாரிக்கிறார் பாலா.

பிதாமகன் மூலம் விக்ரமுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பாலா. பிதாமகனுக்குப் பிறகு புதிய படம் எதையும்இயக்கவில்லை. இடையில் சூர்யா, ஜோதிகாவை வைத்து மாயாவி என்ற படத்தைத் தயாரித்தார்.

அதன் பின்னர் புதிய படத்தை இயக்குவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக இறங்கினார். அஜீத் நடிக்க நானே கடவுள் என்றபடத்தை பாலா இயக்க இருந்தார். பாலாவின் பார்முலாப்படி இந்தப் படத்துக்காக அஜீத் தனது கெட்-அப்பை அப்படியேஉல்டாவாக மாற்றினார்


நீண்ட தாடியும், நீண்ட தலைமுடியும் வளர்த்து வந்தார் அஜீத். உடல் எடையையும் பல கிலோக்கள் குறைத்தார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவிருந்த நிலையில் காட்ஃபாதர் தொடர்பான பிரச்சினையில் சிக்கினார் அஜீத். காட்பாதர்படத்தின் சூட்டிங் இழுபறியாகிப் போனதால் அதை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டுத் தான் பாலாவின் படத்தில் நடிக்கத்தயாரானார் அஜீத்.

ஆனால், காட்ஃபாதர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்துக்குப் போகுமாறு நெருக்க ஆரம்பித்துவிட்டார்கே.எஸ்.ரவிக்குமார்.


முதலில் முடியாது என அஜீத் கூறிவிட்டு முடி வளர்க்க ஆரம்பித்தார். ஆனால், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்ததால், நானேகடவுள் படத்துக்காக கஷ்டப்பட்டு வளர்த்து வந்த தாடி, தலைமுடியை வெட்டி எறிந்துவிட்டு (பாலாவின் அனுமதியுடன் தான்)மீண்டும் காட்ஃபாதரில் நடிக்க ஆரம்பித்தாக் அஜீத்.

இந் நிலையில் நானே கடவுள் படத்தின் கதையில் பாலாவுக்கு திடீரென இல்லாமல் போய் விட்டதாம். இதனால் இந்தப் படத்தைஇப்போதைக்கு எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் பாலா. இதைக் கோட்டு அஜீத் அதிர்ந்துவிட்டாராம்.


அதே நேரத்தில் அஜீத்திடம் வாங்கிய கால்ஷீட், கொடுத்த அட்வான்ஸ் இதையெல்லாம் மனதில் வைத்து பி.வாசுவின்இயக்கத்தில் அஜீத்தை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார் பாலா. இதற்கு அஜீத்தும் ஒத்துக் கொண்டுவிட்டார்.

பி.வாசு, அஜீத்துடன் இணைந்து படம் செய்வது இதுவே முதல் முறையாகும். சந்திரமுகியின் மெகா வெற்றியால் வாசு மீதானஎதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந் நிலையில் அஜீத்-வாசு-பாலா காம்பினேஷன் படம் என்பதால் கோலிவுட்டில் இப்போதே பெரும் எதிர்பார்ப்புஏற்பட்டுவிட்டது. படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

காட்பாதர் முடிந்தவுடன், ஏவி.எம். படத்தில் நடிக்கும் அஜீத் அடுத்ததாக வாசுவின் இயக்கத்தில் நடிக்கிறார்.

தெலுங்கில் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் நயனதாராவை ஹீரோயினாக்கி ஒரு படத்தை இயக்கப் போகிறார் வாசு. அதைமுடித்துவிட்டு அவர் வரவும், ஏவி.எம் படத்தை முடித்துவிட்டு அஜீத் வரவும் சரியாக இருக்குமாம்.

இருவரையும் வைத்து படத்தை பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பாலா.

Read more about: ajith to act in pvasus movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X