Don't Miss!
- News மன்னர் சார்லஸ் திடீரென உயிரிழப்பு? சர்வதேச ஊடகங்கள் சொல்லிடுச்சாம்.. உண்மையில் என்ன நடந்தது!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
வீடு திரும்பினார் அஜீத்!
மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜீத், குணமடைந்து வீடு திரும்பினார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதையடுத்து அவர் சென்னைக்குத் திரும்பினார். வட பழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அவரை டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார் அஜீத்.
இந்த நிலையில் அவரது உடல் நிலையில் நேற்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வீடு திரும்பி விட்டாலும் கூட ஒரு மாதத்திற்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது தனது பண்ணை வீட்டுக்குச் சென்று அஜீத் ஓய்வில் இருந்து வருகிறார்.
பில்லா படத்தில் அஜீத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அஜீத் முழுமையாக குணமடைந்ததும் இந்தக் காட்சிகள் படமாக்கப்படுமாம்.