Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவப்போகும் அஜித்தின் தக்ஷா குழு
சென்னை: அஜித்தின் தக்ஷா குழு தீபாவளி பாதுகாப்பு பணிகளுக்கு உதவ உள்ளது.
அஜித் ஆலோசனைப்படி எம்.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய தக்ஷா ட்ரோன் ஆஸ்திரேலியாவில் நடந்த யுஏவி மெடிகல் எக்ஸ்பிரஸ் சர்வதேச போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தது.
மருத்துவ சேவைக்கு உதவும் நோக்கத்தில் தக்ஷா ட்ரோன் உருவாக்கப்பட்டது. தக்ஷா ட்ரோனை உருவாக்கிய குழுவினர் தற்போது தீபாவளி பாதுகாப்பு பணிகளுக்கு உதவ உள்ளனர்.
தியாகராய நகர் எப்போதுமே கூட்ட நெரிசல் மிகுந்த பகுதி. இப்போது தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால், மக்கள் கூட்டம் அலைமோதும். அதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் திருட்டு வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அவற்றைத் தடுப்பதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் தக்ஷா குழுவினர் உதவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக ஆர் 1 காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையத்தை திறந்துவைத்த அவர், குற்றவாலிகளின் முகத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.