Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தலையில் தூக்கி வைத்து ஆடுவதை விரும்பாதவர் அஜீத்: கௌதம் மேனன்
சென்னை: ஓவர் சீன், பஞ்ச் வசனத்தை விரும்பாதவர் அஜீத் குமார் என இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா, அனுஷ்கா என 2 ஹீரோயின்கள் உள்ள இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அஜீத் பற்றி கௌதம் மேனன் கூறுகையில்,
அஜீத்
அஜீத் மிகவும் நட்புடன் பழகுபவர். அவர் பெரிய ஸ்டாராக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ள மாட்டார்.
என்னை அறிந்தால்
நான் பொதுவாக குறிப்பிட்ட ஹீரோவுக்காக கதையை தயார் செய்வேன். என்னை அறிந்தால் படத்தின் கதை அஜீத் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகே உருவானது.
கமர்ஷியல்
என்னை அறிந்தால் கமர்ஷியல் படம். அதில் எமோஷன், சென்டிமென்ட், திகில், காதல், ஆக்ஷன் உள்ளது.
இமேஜ்
அஜீத் பெரிய நடிகர் என்பதால் படத்தில் அவர் இமேஜை மெயின்டெய்ன் பண்ண வேண்டும் என்ற அழுத்தமே இல்லை. அவருக்கு ஓவர் சீன், அவரை கடவுள் ரேஞ்சுக்கு காட்டுவது, பஞ்ச் வசனம் எல்லாம் பிடிக்காது.
ரசிகர்கள்
என்னையும், எனது ரசிகர்களையும் திருப்திபடுத்த எந்த காட்சியையும் வைக்க வேண்டாம் என்று அஜீத் என்னை கேட்டுக் கொண்டார் என்றார் கௌதம் மேனன்.