Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அப்புக்குட்டியை ஒரு போட்டோதான் எடுத்தார் அஜீத்.. அதுக்கே இவ்ளோ அக்கப்போறா?
கடந்த சில தினங்களாக இணையதளங்களில், சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி.. அதுவும் கிட்டத்தட்ட அஃபிஷியல் அறிவிப்பு போலவே!
அஜீத் ஒரு புதிய படம் இயக்குகிறார்!
-இதுதான் அந்த செய்தி. அவ்வளவுதான் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் குதியாலம் போட, அஜீத் என்ன படமெடுக்கிறார்.. அவருக்கு இயக்கத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள்.
இன்று அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா.
அதாவது அஜீத் பெரும் படமும் இயக்கவில்லை, குறும்படமும் இயக்கவில்லை. அவர் செய்ததெல்லாம், வீரம் படத்தில் தன்னுடன் நடித்த அப்புக்குட்டியை ஒரு புகைப்படம் எடுத்தார். அவ்வளவுதான். அதற்குள் இத்தனை செய்திகள். இவை அனைத்துமே பொய்யானவை. அஜீத் படம் இயக்கினால் அதை நாங்களே முறைப்படி அறிவிக்க மாட்டோமா? என்ற கேள்வியோடு முடித்திருக்கிறார் தன் விளக்கத்தை.
நிற்க...
அஜீத்துக்கு திரைப்பட உருவாக்கம், திரைக்கதை எழுதுவதில் எக்கச்சக்க ஆர்வம் உண்டு. காதல் மன்னன் தொடங்கி அசல் வரை கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குநர் ரேஞ்சுக்கு களத்தில் இறங்கி வேலைப் பார்த்தவர் அஜீத். உண்மையிலேயே படம் இயக்கும் முழு தகுதியும் படைத்தவர் தல என்பது கூடுதல் தகவல்.