Don't Miss!
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- News நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதிப்பவன்.. காப்பிரைட்ஸ் வழக்கில் இளையராஜா வாதம்
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஓவியரின் மகனின் கல்விக்கு ரூ 2.65 லட்சம் உதவி செய்த 'அல்டிமேட்' அஜித்
சென்னை: அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம்.
தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர் ஒருவர் தனது மகன்களை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.
படிப்பு செலவைச் சமாளிக்க முடியாத நிலையில் பலரிடமும் கடன் வாங்கி மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார் ஓவியர்.
மகனுக்கு இது இறுதியாண்டு. ஆனால் இறுதி ஆண்டுக்கான பணத்தை தந்தையால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. கல்லூரியிலிருந்து மகனை வெளியேற்றும் நிலை உருவானதாம். வேறு வழியில்லாமல் தன்னிடம் அன்பு பாராட்டும் நடிகர் சிவகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகரம் பவுண்டேஷன்லேர்ந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாராம் ஓவியர்.
ஆனால் அகரம் பவுண்டேஷன் விதிமுறைகள் இடம் தராததால், சிவகுமாரே குறிப்பிட்ட தொகை கொடுத்து உதவியிருக்கிறார்.
அது போதவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் அஜீத் மேலாளருக்கு அனைத்து விவரங்களையும் அனுப்பி வைத்தார் ஓவியர்.
பத்து நாட்கள் கடந்தன. அஜீத் தரப்பிலிருந்து ஓவியருக்கு எந்த பதிலும் இல்லை. பதட்டமாகிவிட்ட ஓவியர், பத்திரிகையாளரிடம் 'என்ன... உதவி கிடைக்குமா?' என விசாரிக்க ஆரம்பித்த போது, அஜீத்திடமிருந்து நல்ல சேதி வந்தது.
ஓவியர் கேட்ட தொகை மொத்தத்தையும் அஜீத் ஒரு காசோலையில் நிரப்பி தன் மேலாளர் மூலம் கொடுத்தனுப்பி விட்டார். அவர் கொடுத் தொகை ரூ 2.65 லட்சம்.
ஓவியர் மகனின் படிப்புச் செலவு முழுவதையுமே இந்தத் தொகையில் சமாளித்துவிடலாம் என்பதால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாராம் ஓவியர்.